133. ஊடலுவகை
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை.
1321. | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. |
|
1322. | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். |
|
1323. | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. |
|
1324. | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. |
|
1325. | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. |
|
1326. | உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. |
|
1327. | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். |
|
1328. | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. |
|
1329. | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. |
|
1330. | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:29 AM