132. புலவி நுணுக்கம்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம்.
1311. | பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. |
|
1312. | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. |
|
1313. | கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. |
|
1314. | யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. |
|
1315. | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். |
|
1316. | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். |
|
1317. | வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. |
|
1318. | தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. |
|
1319. | தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. |
|
1320. | நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:29 AM