50. இடனறிதல்.
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இடனறிதல்.
491. | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. |
|
492. | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். |
|
493. | ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். |
|
494. | எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். |
|
495. | நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. |
|
496. | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. |
|
497. | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். |
|
498. | சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். |
|
499. | சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. |
|
500. | காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:00 AM