49. காலமறிதல்.
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: காலமறிதல்.
481. | பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
|
482. | பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. |
|
483. | அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். |
|
484. | ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். |
|
485. | காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். |
|
486. | ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. |
|
487. | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
|
488. | செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. |
|
489. | எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். |
|
490. | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:00 AM