114. நாணுத்துறவுரைத்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்:நாணுத்துறவுரைத்தல் .
1131 | காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. |
|
1132 | நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. |
|
1133 | நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மட. |
|
1134 | காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. |
|
1135 | தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். |
|
1136 | மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். |
|
1137 | கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். |
|
1138 | நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். |
|
1139 | அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. |
|
1140 | யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. |
|
Last modified: Tuesday, 1 February 2022, 6:01 AM