115. அலரறிவுறுத்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல் .
1141 | அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். |
|
1142 | மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். |
|
1143 | உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. |
|
1144 | கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. |
|
1145 | களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. |
|
1146 | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. |
|
1147 | ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். |
|
1148 | நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். |
|
1149 | அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. |
|
1150 | தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். |
|
Last modified: Tuesday, 1 February 2022, 6:01 AM