அம்மாவின் அன்பு
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா புழுதி துடைத்து நீரும் ஆட்டிப் பூவுஞ் சூட்டும் அம்மா அழுது விழுந்த போதும் என்னை அணைத்துத் தாங்கும் அம்மா அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி அழிவு செய்த போதும் பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று பொறுத்துக் கொள்ளும் அம்மா பள்ளிக் கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித் தோளிற் போடும் அம்மா பாப்பா மலர்ப் பாட்டை நானும் பாடி ஆடும் போது வாப்பா இங்கே வாடா என்று வாரித் துாக்கும் அம்மா. |
Last modified: Wednesday, 16 November 2022, 9:21 AM