122. கனவுநிலையுரைத்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்.
1221. | காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. |
|
1212. | கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். |
|
1213. | நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். |
|
1214. | கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. |
|
1215. | நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. |
|
1216. | நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். |
|
1217. | நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது. |
|
1218. | துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. |
|
1219. | நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். |
|
1210. | நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். |
|
இறுதியாக மாற்றியது: புதன், 2 பிப்ரவரி 2022, 10:24 காலை