121. நினைந்தவர்புலம்பல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்:நினைந்தவர்புலம்பல்.
1201. | உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. |
|
1202. | எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல். |
|
1203. | நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். |
|
1204. | யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். |
|
1205. | தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். |
|
1206. | மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன். |
|
1207. | மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். |
|
1208. | எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. |
|
1209. | விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. |
|
1210. | விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:24 AM