7. புதல்வரைப் பெறுதல்
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்.
61. | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. |
|
62. | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். |
|
63. | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். |
|
64. | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். |
|
65. | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. |
|
66. | குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். |
|
67. | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். |
|
68. | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
|
69. | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
|
70. | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 6:33 AM