62. ஆள்வினை உடைமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை.
611. | அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். |
|
612. | வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. |
|
613. | தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. |
|
614. | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். |
|
615. | இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். |
|
616. | முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
|
617. | மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். |
|
618. | பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. |
|
619. | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். |
|
620. | ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:01 AM