31. வெகுளாமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை.
301. | செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் . |
|
302. | செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. |
|
303. | மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். |
|
304. | நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. |
|
305. | தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். |
|
306. | சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். |
|
307. | சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
|
308. | இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. |
|
309. | உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். |
|
310. | இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 3:15 AM