48. வலியறிதல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்: வலியறிதல்.
471. | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். |
|
472. | ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். |
|
473. | உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். |
|
474. | அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். |
|
475. | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். |
|
476. | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். |
|
477. | ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. |
|
478. | ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. |
|
479. | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். |
|
480. | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 6:09 AM