44. குற்றங்கடிதல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:குற்றங்கடிதல்.
431. | செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. |
|
432. | இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. |
|
433. | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். |
|
434. | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. |
|
435. | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். |
|
436. | தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. |
|
437. | செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். |
|
438. | பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. |
|
439. | வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. |
|
440. | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். |
|
இறுதியாக மாற்றியது: புதன், 2 பிப்ரவரி 2022, 5:32 காலை