45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்.
441. | அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். |
|
442. | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். |
|
443. | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். |
|
444. | தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. |
|
445. | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். |
|
446. | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். |
|
447. | இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். |
|
448. | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். |
|
449. | முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. |
|
450. | பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:40 AM