110. குறிப்பறிதல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்:குறிப்பறிதல்.
1091 | இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. |
|
1092 | கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. |
|
1093 | நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். |
|
1094 | யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். |
|
1095 | குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். |
|
1096 | உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். |
|
1097 | செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. |
|
1098 | அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். |
|
1099 | ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. |
|
1100 | கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. |
|
Last modified: Tuesday, 1 February 2022, 6:01 AM