செயற்பாடு 4 - பந்தியை வாசித்து விடை எழுதுதல்.

பின்வரும் பந்தியை வாசித்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

மாதவன் காலையில் வகுப்பிற்கு வந்தபோது அங்கு வேறு எவரும் வந்திருக்கவில்லை. புத்தகப் பையை மேசை மீது வைத்துவிட்டு அவன் துடைப்பத்தை எடுத்து வகுப்பைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். அதன் பின்னர் வந்த பீற்றர் அவனுக்கு உதவி செய்தான். அடுத்ததாக வந்த சாந்தி பூச்சாடியில் இருந்த பூக்களை அகற்றிவிட்டு புதிய பூக்களைச் செருகினாள். அதன் பின்னர் வந்த கரீம் மேசைகளையும் கதிரைகளையும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.