99. சான்றாண்மை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். சான்றாண்மை.
981. | கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. |
|
982. | குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. |
|
983. | அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு கஐந்துசால் ஊன்றிய தூண். |
|
984. | கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. |
|
985. | ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. |
|
986. | சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். |
|
987. | இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. |
|
988. | இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். |
|
989. | ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். |
|
990. | சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. |
|
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>> |
Last modified: Wednesday, 16 February 2022, 3:39 AM