94. சூது
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். சூது.
931. | வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. |
|
932. | ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. |
|
933. | உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். |
|
934. | சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். |
|
935. | கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். |
|
936. | அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். |
|
937. | பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். |
|
938. | பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. |
|
939. | உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். |
|
940. | இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். |
|
<<<<<<<<<<<>>>>>>>>>> |
Last modified: Wednesday, 16 February 2022, 3:38 AM