93. கள்ளுண்ணாமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். கள்ளுண்ணாமை்.
921. | உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். |
|
922. | உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். |
|
923. | ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. |
|
924. | நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. |
|
925. | கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். |
|
926. | துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். |
|
927. | அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். |
|
928. | களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். |
|
929. | களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. |
|
930. | கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. |
|
<<<<<<<<<<>>>>>>>>> |
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 16 පෙබරවාරි 2022, 3:38 පෙ.ව.