11. செய்ந்நன்றி அறிதல்
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.
101. | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. |
|
102. | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. |
|
103. | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. |
|
104. | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். |
|
105. | உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
|
106. | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
|
107. | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. |
|
108. | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. |
|
109. | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
|
110. | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 6:03 PM