88. பகைத்திறந்தெரிதல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: பகைத்திறந்தெரிதல்.
871. | பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. |
|
872. | வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. |
|
873. | ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். |
|
874. | பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. |
|
875. | தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. |
|
876. | தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். |
|
877. | நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. |
|
878. | வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. |
|
879. | இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. |
|
880. | உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். |
|
<<<<<<>>>>> |
Last modified: Wednesday, 16 February 2022, 3:37 AM