87. பகைமாட்சி
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: பகைமாட்சி.
861. | வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. |
|
862. | அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. |
|
863. | அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. |
|
864. | நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. |
|
865. | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் மபண்பிலன் பற்றார்க்கு இனிது. |
|
866. | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். |
|
867. | கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. |
|
868. | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து. |
|
869. | செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். |
|
870. | கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. |
|
<<<<<>>>> |
Last modified: Wednesday, 16 February 2022, 3:37 AM