131. புலவி
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: புலவி.
1301. | புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. |
|
1302. | உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். |
|
1303. | அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். |
|
1304. | ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. |
|
1305. | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. |
|
1306. | துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. |
|
1307. | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. |
|
1308. | நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. |
|
1309. | நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. |
|
1310. | ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:28 AM