129. புணர்ச்சிவிதும்பல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்.
1281. | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. |
|
1282. | தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். |
|
1283. | பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண். |
|
1284. | ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. |
|
1285. | எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. |
|
1286. | காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. |
|
1287. | உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. |
|
1288. | இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. |
|
1289. | மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். |
|
1290. | கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:27 AM