129. புணர்ச்சிவிதும்பல்

குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்.

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
பனைத்துணையும் காமம் நிறைய வரின்.
1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்
கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.
1286. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
1289. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
Last modified: Wednesday, 2 February 2022, 10:27 AM