126. நிறையழிதல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்:நிறையழிதல்.
1251. | காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. |
|
1252. | காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். |
|
1253. | மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். |
|
1254. | நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். |
|
1255. | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. |
|
1256. | செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். |
|
1257. | நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். |
|
1258. | பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. |
|
1259. | புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. |
|
1260. | நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:26 AM