123. பொழுதுகண்டிரங்கல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.
1221. | மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. |
|
1222. | புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. |
|
1223. | பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். |
|
1224. | காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். |
|
1225. | காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. |
|
1226. | மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். |
|
1227. | காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். |
|
1228. | அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. |
|
1229. | பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. |
|
1230. | பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:25 AM