3. நீத்தார் பெருமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை.
21. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. |
|
22. | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
|
23. | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. |
|
24. | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. |
|
25. | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. |
|
26. | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். |
|
27. | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. |
|
28. | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். |
|
29. | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. |
|
30. | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். |
|
இறுதியாக மாற்றியது: செவ்வாய், 15 நவம்பர் 2022, 11:20 காலை