108. கயமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: கயமை.
1071 | மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். |
|
1072 | நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். |
|
1073 | தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். |
|
1074 | அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். |
|
1075 | அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. |
|
1076 | அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். |
|
1077 | ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. |
|
1078 | சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். |
|
1079 | உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். |
|
1080 | எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. |
|
Last modified: Thursday, 3 February 2022, 5:59 AM