105. நல்குரவு

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்:நல்குரவு.

1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
1042 இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
Last modified: Thursday, 3 February 2022, 5:37 AM