105. நல்குரவு
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்:நல்குரவு.
1041 | இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. |
|
1042 | இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். |
|
1043 | தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. |
|
1044 | இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். |
|
1045 | நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். |
|
1046 | நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். |
|
1047 | அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். |
|
1048 | இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. |
|
1049 | நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. |
|
1050 | துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. |
|
Last modified: Thursday, 3 February 2022, 5:37 AM