103. குடிசெயல்வகை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்:குடிசெயல்வகை.
1021 | கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். |
|
1022 | ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. |
|
1023 | குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். |
|
1024 | சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. |
|
1025 | குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. |
|
1026 | நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். |
|
1027 | அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. |
|
1028 | குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். |
|
1029 | இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு. |
|
1030 | இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. |
|
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 2 පෙබරවාරි 2022, 5:47 පෙ.ව.