63. இடுக்கண் அழியாமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: இடுக்கணழியாமை.
621. | இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். |
|
622. | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். |
|
623. | இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். |
|
624. | மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. |
|
625. | அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். |
|
626. | அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். |
|
627. | இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். |
|
628. | இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். |
|
629. | இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். |
|
630. | இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:02 AM