59. ஒற்றாடல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல்.
581. | ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். |
|
582. | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். |
|
583. | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். |
|
584. | வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. |
|
585. | கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. |
|
586. | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. |
|
587. | மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. |
|
588. | ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் |
|
589. | ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். |
|
590. | சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:01 AM