56. கொடுங்கோன்மை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை.
551. | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. |
|
552. | வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. |
|
553. | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். |
|
554. | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. |
|
555. | அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. |
|
556. | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. |
|
557. | துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. |
|
558. | இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். |
|
559. | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். |
|
560. | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:01 AM