29. கள்ளாமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கள்ளாமை.
281. | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
|
282. | உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். |
|
283. | களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். |
|
284. | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். |
|
285. | அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
|
286. | அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். |
|
287. | களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல் |
|
288. | அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
|
289. | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். |
|
290. | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 3:15 AM