23. ஈகை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.
221. | வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
|
222. | நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. |
|
223. | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. |
|
224. | இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. |
|
225. | ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். |
|
226. | அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. |
|
227. | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. |
|
228. | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். |
|
229. | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். |
|
230. | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 3:14 AM