120. தனிப்படர்மிகுதி
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்:தனிப்படர்மிகுதி.
1191. | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. |
|
1192. | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. |
|
1193. | வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. |
|
1194. | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். |
|
1195. | நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. |
|
1196. | ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. |
|
1197. | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். |
|
1198. | வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். |
|
1199. | நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. |
|
1200. | உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:24 AM