117. படர்மெலிந்திரங்கல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல் .
1161. | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். |
|
1162. | கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். |
|
1163. | காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து. |
|
1164. | காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். |
|
1165. | துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். |
|
1166. | இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. |
|
1167. | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். |
|
1168. | மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. |
|
1169. | கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடிய கழியும் இரா. |
|
1170. | உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 10:22 AM