20. பயனில சொல்லாமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்:பயனில சொல்லாமை.
191. | பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். |
|
192. | பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. |
|
193. | நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. |
|
194. | நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. |
|
195. | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். |
|
196. | பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். |
|
197. | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
|
198. | அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் |
|
199. | பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். |
|
200. | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 3:14 AM