85. புல்லறிவாண்மை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: நட்பியல். அதிகாரம்: புல்லறிவாண்மை.
841. | அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. |
|
842. | அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். |
|
843. | அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. |
|
844. | வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. |
|
845. | கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். |
|
846. | அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. |
|
847. | அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. |
|
848. | ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். |
|
849. | காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. |
|
850. | உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். |
|
<<<>> |
Last modified: Wednesday, 2 February 2022, 5:03 AM