52. தெரிந்துவினையாடல்.
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்து வினையாடல்
511. | நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். |
|
512. | வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. |
|
513. | அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. |
|
514. | எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். |
|
515. | அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. |
|
516. | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். |
|
517. | இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். |
|
518. | வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். |
|
519. | வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. |
|
520. | நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:00 AM