51. தெரிந்து தெளிதல்
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்து தெளிதல்
501. | அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். |
|
502. | குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு. |
|
503. | அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. |
|
504. | குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். |
|
505. | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். |
|
506. | அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. |
|
507. | காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும். |
|
508. | தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். |
|
509. | தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். |
|
510. | தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:00 AM