42. கேள்வி
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:கேள்வி.
411. | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. |
|
412. | செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். |
|
413. | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. |
|
414. | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |
|
415. | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். |
|
416. | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
|
417. | பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். |
|
418. | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. |
|
419. | நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. |
|
420. | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:17 AM