41. கல்லாமை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:கல்லாமை.
401. | அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். |
|
402. | கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. |
|
403. | கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். |
|
404. | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். |
|
405. | கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். |
|
406. | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். |
|
407. | நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. |
|
408. | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. |
|
409. | மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. |
|
410. | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 5:10 AM