40. கல்வி
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்:அரசியல். அதிகாரம்:கல்வி.
391. | கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. |
|
392. | எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. |
|
393. | கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். |
|
394. | உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். |
|
395. | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். |
|
396. | தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. |
|
397. | யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. |
|
398. | ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. |
|
399. | தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். |
|
400. | கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. |
|
අවසන් වරට නවීකරණය කරන ලද: බදාදා, 2 පෙබරවාරි 2022, 4:59 පෙ.ව.