38. ஊழ்
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்
371. | ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. |
|
372. | பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. |
|
373. | நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். |
|
374. | இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. |
|
375. | நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. |
|
376. | பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. |
|
377. | வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. |
|
378. | துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். |
|
379. | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். |
|
380. | ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 4:50 AM