37. அவாவறுத்தல்
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.
361. | அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. |
|
362. | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். |
|
363. | வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல். |
|
364. | தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். |
|
365. | அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். |
|
366. | அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. |
|
367. | அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். |
|
368. | அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். |
|
369. | இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். |
|
370. | ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். |
|
Last modified: Wednesday, 2 February 2022, 4:50 AM