66. வினைத்தூய்மை
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்தூய்மை..
651. | துணைநலம் ஆக்கம் தரும் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். |
|
652. | என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. |
|
653. | ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். |
|
654. | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். |
|
655. | எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. |
|
656. | ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. |
|
657. | பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. |
|
658. | கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். |
|
659. | அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. |
|
660. | சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. |
|
< |
Last modified: Wednesday, 2 February 2022, 5:02 AM