34. நிலையாமை
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்:நிலையாமை.
331. | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. |
|
332. | கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. |
|
333. | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். |
|
334. | நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். |
|
335. | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். |
|
336. | நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. |
|
337. | ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. |
|
338. | குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. |
|
339. | உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. |
|
340. | புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. |
|
Last modified: Wednesday, 2 February 2022, 4:49 AM