113. காதற்சிறப்புரைத்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்:காதற்சிறப்புரைத்தல் .
1121 | பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். |
|
1122 | உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. |
|
1123 | கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். |
|
1124 | வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. |
|
1125 | உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். |
|
1126 | கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர். |
|
1127 | கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. |
|
1128 | நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. |
|
1129 | இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். |
|
1130 | உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். |
|
Last modified: Tuesday, 1 February 2022, 6:01 AM